தி.மு.க. பேரூராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
தென்காசி: தென்காசி அருகே உள்ளது இலஞ்சி கிராமம். இங்கு தி.மு.க. பேரூராட்சி நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகம் மீனாட்சி நகர், ராயல் நகர், கோல்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளை அழித்து வீட்டுமனை போடுபவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஒழுங்கற்ற முறையில் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தியும், இலஞ்சிக்கு வரும் குற்றாலம் குடிநீரை குளத்து நீரோடு கலப்பதைக் கண்டித்தும் இலஞ்சி பள்ளி அருகே காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகரத் தலைவர் ஆனந்த் முருகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமாரவேல் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடிகுறி்ச்சி முத்தையா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான காங்கிரசாரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.