இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு
இலங்கை: இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது.
ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான குழு, இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகின்றது. இந்த குழுவால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கற்பழிப்பு என்ணும் குற்றச் செயலை தடுத்து நிறுத்தவேண்டுமானால் குற்றவாளிகளை உறுதியாகத் தண்டிக்க வேண்டும். அவர்கள் தப்பிச் செல்லவோ, மன்னிப்புப் பெறவோ அனுமதிக்கக் கூடாது என்று மார்கொட் வோல்ஸ்ரொம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தெரிவித்தார்.
இலங்கை தவிர மியான்மர், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின் போது நடந்த கற்பழிப்புச் சம்பவங்கள் குறித்தும் அவரது குழு தகவல்களை சேகரித்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.