திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்கும் லக்கேஜ் ஸ்கேனர்
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக திருவனந்தபுரம் ரயி்ல் நிலையத்தி்ல் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்க லக்கேஜ் ஸ்கேனர் கருவி அமைக்கப்பட உள்ளது.
சமீபத்தில் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் ரயிலில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. நிலம்பூர் ரயிலில் பிரேக் குழாய் அறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து தீவிரவாதிகள் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக கேரளாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வி்மான நிலையங்களில் இருப்பது போல் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் லக்கேஜ் ஸ்கேனர் கருவி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்படுகிறது.
ரயி்ல் நிலைய முக்கிய நுழைவு வாயில் அருகே இந்த ஸ்கேனர் அமைக்கப்படும். ரயில் நிலையத்தில் லக்கேஜ் ஸ்கேனர் கருவி அமைக்கப்படுவது நாட்டில் இதுவே முதல்முறை. சந்தேகத்திற்கிடமான பொருட்களை பரிசோதித்த பிறகே பயணிகளுக்கு அளிக்கப்படும். இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஸ்கேனர் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுதந்திர தினம், ஓணம் பண்டிகை நெருங்குவதை அடுத்து கேரளாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications