அமைச்சருக்கு விமானத்தில் இடம் மறுப்பு-லோக்சபாவில் டி.ஆர்.பாலு கண்டனம்

ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்ல ஏர் இந்தியா விமானத்தில் புக் செய்திருந்தார் பெரியகருப்பன். அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூத்த அதிகாரி ஒருவரின் மனைவியான சுலோச்சனா ராமதாஸ் என்பவர் ஓசியில் பயணம் செய்ய அனுமதித்த ஏர் இந்தியா நிறுவனம் பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு இடம் இல்லை என்று கூறி விட்டது.
இந்த விவகாரத்தை இன்று லோக்சபாவில் திமுக எழுப்பியது. டி.ஆர்.பாலு இதுகுறித்துப் பேசுகையில்,
மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்துக்காக முன்பதிவு செய்த தமிழக அமைச்சர் ஒருவரின் பயணச்சீட்டை காத்திருப்பு பட்டியலில் விமான நிறுவனம் வைத்தது. ஆனால் அதே விமானத்தில் அந்த விமான நிறுவன உயரதிகாரியின் மனைவி இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் பிரதிநிதியான அமைச்சருக்கு மதிப்பு அளிக்காமல், அதிகாரியின் மனைவிக்கு சலுகை வழங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications