தமிழகத்தின் புகார் எதிரொலி-ஆக. 24ல் கூடுகிறது காவிரி நிலைக்குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தமிழகம் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து காவிரி நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம் தேதி டெல்லியில் இது நடைபெறுகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 70 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகமோ கடந்த ஜூன் மாதம் வெறும் 20 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளது.
இதையடுத்து காவிரி நிலைக்குழுவில் தமிழக அரசு புகார் கூறியது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க நிலைக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24ம்தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், புதுச்சேரி, கேரளா உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications