தமிழகத்தில் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சி: ஆந்திர டிஜிபி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழகம் உள்பட பிற தென் மாநிலங்களிலும் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சித்து வருவதாக ஆந்திர மாநில டிஜிபி கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.

தென் மாநில டிஜிபிக்களின் கூட்டம் ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிருபர்களிடையே பேசிய அவர்,

நாடு முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்ப நக்ஸல்கள் முயற்சித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகம், கேரளத்திலும் அவர்கள் தங்கள் கிளைகளை அமைக்க முயற்சிகளைத் துவங்கியுள்ளனர். இதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.

இந்த அபாயம் குறித்து அண்டை மாநிலங்களை எச்சரித்திருக்கிறோம்.

இதைத் தடுக்க தொடக்க நிலையிலேயே தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆந்திரத்தில் நக்ஸல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் அண்மையில் நக்ஸலைட்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக, ஆந்திர போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+