'அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆனால்'.. நக்ஸல்கள் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil

இத்தகவலை சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆந்திராவில் போலீஸ் என்கெளண்ன்ட்டரில் நக்ஸல் இயக்கத் தலைவரான ஆஸாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
தன்னை ஒருவர் மூலம் தொடர்பு கொண்ட நக்ஸல்கள் ஆஸாத் கொல்லப்பட்டது குறித்து மத்திய அரசும், ஆந்திர அரசும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவி்த்ததாக அக்னிவேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து இதுகுறித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவர் நேரம் ஒதுக்கினால் நக்ஸல்களின் அறிவிப்பு குறித்து நேரில் விளக்கப் போவதாகவும் அக்னிவேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications