புது வழக்குப் பதிவு செய்த கேரள அரசு-மதானியைக் காக்க சிபிஎம் அரசு முயற்சி?
கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதானி கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கேரள போலீசார் அவர் மீது புதிய கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் கர்நாடக போலீஸ் வசம் அவர் சிக்கி விடாமல் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு முயற்சிப்பதாக தெரிகிறது.
பெங்களூரில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கோரமங்களா, மடிவாளா உள்பட பல இடங்களில் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து மதானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து பெங்களூர் உயர்நீதிமன்றமும் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெங்களூர் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் மதானிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.
பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா தலைமையி்ல் 6 போலீஸ் அதிகாரிகள் 10ம் தேதி காலை 4 மணி அளவில் கொல்லம் சென்றனர். அவர்கள் மாவட்ட எஸ்பி ஹர்சிதா அட்டல்லூரியை சந்தித்து மதானியை கைது செய்ய உதவக்கேட்டு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி எழுதிய கடித்ததை கொடுத்தனர்.
இந்நிலையில் சாஸ்தான் கோ்ட்டை போலீசார் மதானி, அவரது கட்சி நிர்வாகிகள் பூந்துரை சீராஜ், கொல்லம் மாவட்ட தலைவர் மயில்காடு ஷா ஆகியோர் மீது சமூக ஓற்றுமையை சீர்குலைக்க முயன்றது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்பட 6 பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கோஷம் எழுப்பியது, முன்னாள் அமைச்சர் ஆரியாடன் கொடும்பாவி எரித்தது ஆகியவை தொடர்பாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் மதானியை கைது செய்யவும், கேரள போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் கர்நாடக போலீசாரிடம் மதானியை ஓப்படைப்பதை தடுக்க கேரள போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மதானி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை அங்கிருந்த மீட்க கேரள அரசு கடுமையாக முயன்றது. இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனும் சரி, முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியும் சரி கடுமையாக முயன்றனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் கருணாநிதி என அவர்கள் கடுமையாக முட்டிப் பார்த்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மதானி கர்நாடக போலீஸாரிடம் சிக்கி விடாமல் தடுக்கும் வகையில், கேரள அரசு அவரைக் காக்க மறைமுகமாக முயல்கிறதோ என்ற சந்தேகம் கர்நாடக போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications