அரசியல் தலைவராக இருக்க லாயக்கில்லாதவர் சிரஞ்சீவி-ஜீவிதா தாக்கு

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளாக ரத்த வங்கி நடத்தி வருகிறார். அதில் தனது கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் இருந்து இலவசமாக ரத்தம் வாங்குகிறார். ஆனால் தனது வங்கியில் இருந்து 30 சதவீதம் ரத்தத்தை அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கி விட்டு மீதம் உள்ள 70 சதவீத ரத்தத்தை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்.
இலவசமாக பெறும் ரத்தத்தை, ஏழை- எளிய மக்களுக்கு இலவசமாகத்தான் வழங்க வேண்டும் ஆனால் அதை வியாபாரமாக செய்து வருவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரஞ்சீவி யாத்திரையின் போது ஜெகன்மோகன் ரெட்டியை தேவையே இல்லாமல் விமர்சித்து வருகிறார். இது அரசியல் அனுபவம் இல்லாததையே காட்டுகிறது. அவருக்கு அரசியல் தலைவருக்கான எந்த தகுதியும் இல்லை.
சினிமாவில் சிரஞ்சீவி நன்றாக நடிப்பார். அதில் அவரை மிஞ்ச முடியாது. ஆனால் அவருக்கு அரசியலில் போதிய அனுபவமும், திறமையும் இல்லை ன்றார் அவர்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் காரில் வந்தபோது அவர்களை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கினர். இதையடுத்து ராஜசேகர் வீட்டுக்கு வந்து நேரில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார் சிரஞ்சீவி என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications