மேஜர் லைஸ்ராமுக்கு மரணத்திற்குப் பிந்தைய அசோக் சக்ரா விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராணுவ மருத்துவ அதிகாரியான மேஜர் லைஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. மறைவுக்குப் பின்பு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின்போது பத்து பேரை காப்பாற்றி தன்னுயிரை ஈந்தவர் லைஸ்ராம் சிங்.
தூதரகம் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுடன் வெறும் கையால் மோதி தீரமாக செயல்பட்டவர் லைஸ்ராம்.
இதேபோல கேப்டன் டேவிதார் சிங் ஜாஸ், சட்டிஸ்கரின் எஸ்.பி. வினோத் குமார் செளபே ஆகியோருக்கும் மறைவுக்கு பிந்தைய கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் உள்பட மொத்தம் 114 வீர விருதுகள் இன்று வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications