ஆகஸ்ட் 25ல் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி திமுகவில் இணைகிறார்
திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆகஸ்ட் 25-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகின்றார்.
திருப்பூர் தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை அளித்தற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தமிழக துணை முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக கோவிந்தசாமி அறிவித்தார்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கட்சி தலைமை நீக்கியது.
இதனால், கோவிந்தசாமி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் கருதுகளை கேட்டறிந்தார். அதில் அவர்கள் திமுகவில் சேர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
எனவே, ஆகஸ்ட் 25-ம் தேதி தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருடன் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கோவிந்தசாமி திமுகவில் இணைய உள்ளார். இதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications