For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓசூர் அருகே குழந்தைத் திருமணம்-தடுத்து நிறுத்திய கலெக்டர்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் மாவட்ட ஆட்சியர் வி. அருண் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.

மதிகிரி டவுன் பஞ்சாயத்தில் உள்ள தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், +1 மாணவியான என். லட்சிமிக்கும் திருமணம் நடக்க இருந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அருணுக்குத் தகவல் போனது. அவர் அதிகாரிகளிடம் இதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து ஓசூர் சென்னசமுத்திரம் பஞ்சாயத்தில் உள்ள தோட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த மணமகனின் பெற்றோரிடம் இந்து திருமண சட்டப்படி இது குற்றம் என்பதை அதிகாரிகள் எடுத்துச் சொன்னவுடன் திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் கடந்த ஜீன் மாதம் 24-ம் தேதி தான் நடந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வளாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X