மின் தடையால் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிகள் பாதிப்பு-அரசு ஊழியர் சங்கம் புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அறிவிக்கப்படாத மின்தடையால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் கு.பாலசுப்ரமணியம் கூறுகையில், பல அரசு அலுவலகங்களில் திடீர் திடீரென மின் தடை ஏற்படுவதால் டேட்டா என்ட்ரி பணிகள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும், உரிய யுபிஎஸ் வசதி செய்து தரப்படாததாலும் டேட்டாக்களைப் பதிவு செய்யும் பணி பெரும் சிரமத்திற்குள்ளாகிறது.

இந்த அறிவிக்கப்படாத மின் தடை காரணமாக கம்ப்யூட்டர்மயமாக்கப் பணிக்குப் பெரும் குந்தகம் ஏற்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல 30,000 டாஸ்மாக் ஊழியர்களின் பணியை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட மேலவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு இட ஒதுக்கீடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+