ஜெயலிலதா புகாருக்கு ஆளான தாந்தோனி வேளாண்மை ஆதிகாரி செல்லமுத்து சஸ்பெண்ட்

கடந்த 14- ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கரூர் தாந்தோனிமலை வேளாண்மை விற்பனை மையத்தில் யூரியா மற்றும் உரத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி அதை டி.என்.பி.எல். நிர்வாகத்திற்கு வழங்கியதில் சுமார் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் உழல் நடைபெற்றுள்ளது. இந்த பணம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வரை சென்றுள்ளதாக கூறப்படுகின்றது என குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு ஆளான தாந்தோனி வேளாண்மை விற்பனை மைய அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சின்ன ஆண்டாங்கோவில் ரோட்டில் செயல்பட்டு வந்தது.
தற்போது, அந்த இடத்தை காலி செய்து வி்ட்டு தாந்தோனி மலையில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தாந்தோனி வேளாண்மை விற்பனை மைய அதிகாரி செல்லமுத்துவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications