வட்டியை 12.25 சதவீதமாக உயர்த்திய எஸ்பிஐ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தியுள்ளது.

வீடு மற்றும் வாகனக் கடன் வழங்குவதில் நாட்டின் முன்னணி வங்கியாக எஸ்பிஐ விளங்குகிறது. இந்நிறுவனம் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று அடிப்படை வட்டியை 11.75 சதவீதத்தில் இருந்து 12.25 ஆக உயத்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கடனுக்கான வட்டியை மற்ற வங்கிகளை விட எஸ்பிஐ அதிகமாக 7.5 சதவீதமாக உயர்த்தியது.

இதைதே தொடர்ந்து வெவ்வேறு நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை 1.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்த்தியது.

அதன்படி 1 ஆண்டுக்கான வட்டி 6 சதவீதம், 555 நாளுக்கான வட்டி 7.25 சதவீதம், 5 ஆண்டுக்கான வட்டி 7.25 சதவீதம், 8 ஆண்டுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+