தீப்பொறி ஆறுமுகம் பேசிய கூட்டத்தில் கத்தியுடன் பாய்ந்த அதிமுக நிர்வாகி கைது
சென்னை: திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் தீப்பொறி ஆறுமுகம் அனல் பறக்க பேசிக் கொண்டிருந்தபோது கத்தியுடன் பாய்ந்தார் அதிமுக பிரமுகர். அவரை அனைவரு் வளைத்துப் பிடித்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் தி.மு.க. அரசின் சாதனைகளையும், ஜெயலலிதாவை கண்டித்தும் தி.மு.க. பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், சைதை கா.கிட்டு, தாயகம் கவி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவு 9.30 மணி அளவில் தீப்பொறி ஆறுமுகம் பேசினார்.
அப்போது மேடை அருகில் ஒரு மர்ம நபர் சுற்றி திரிந்தார். திடீரென அவர் தீப்பொறி ஆறுமுகம் பேசும் போது இடையில் புகுந்து தகராறில் ஈடுபட்டார்.
தரக்குறைவாக பேசியபடியே மேடை ஏற முயன்றார். உடனே அங்கிருந்த தி.மு.க.வினர் அவரை பிடித்து அடித்து உதைத்தனர்.
அப்போது அவரது இடுப்பில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், அவரது பெயர் சேகர் (50), ஈக்காட்டு தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர், 140 வது வட்ட ஜெயலலிதா பேரவை அவைத்தலைவராக உள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து திமுக வட்ட துணைச் செயலாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications