எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு-ஆனால் 500% வேண்டும் என்று எம்.பிக்கள் அடம்

ஆனால் இது போதாது, 500 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய சம்பள விகிதத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது எம்.பிக்களுக்கு தினசரிப் படியாக இனிமேல் ரூ. 2000 வழங்கப்படும். மாதாந்திர தொகுதிப் படி ரூ. 20,000 என்பதிலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
அலுவலக செலவுகளுக்காக இனிமேல் எம்.பிக்களுக்கு ரூ. 40,000 வழங்கப்படும். இது தற்போது ரூ. 20 ஆயிரமாக உள்ளது.
கன்வேயன்ஸ் அலவன்ஸும் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1 லட்சம் வாங்கும் எம்.பி்க்கள் இனிமேல் ரூ. 4 லட்சம் பெறுவார்கள்.
எம்.பிக்களின் கணவர்மார் அல்லது மனைவிமார்கள், தங்களது இருப்பிடத்திலிருந்து டெல்லி வந்து போக இனிமேல் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், தங்களது இடத்திலிருந்து டெல்லிக்கு வந்து செல்ல எட்டு முறை இலவச விமான பயணமும் இனி அனுமதிக்கப்படும்.
ஆனால் இந்த உயர்வு போதாது என்று லாலு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குறைந்தது 500 சதவீத அளவுக்கு உயர்வு வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications