Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு-ஆனால் 500% வேண்டும் என்று எம்.பிக்கள் அடம்

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 சதவீத ஊதிய உயர்வை அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது ரூ. 16,000 மாதச் சம்பளம் வாங்கும் எம்.பிக்கள் இனிமேல் ரூ. 50,000 வாங்குவார்கள்.

ஆனால் இது போதாது, 500 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சம்பள விகிதத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது எம்.பிக்களுக்கு தினசரிப் படியாக இனிமேல் ரூ. 2000 வழங்கப்படும். மாதாந்திர தொகுதிப் படி ரூ. 20,000 என்பதிலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

அலுவலக செலவுகளுக்காக இனிமேல் எம்.பிக்களுக்கு ரூ. 40,000 வழங்கப்படும். இது தற்போது ரூ. 20 ஆயிரமாக உள்ளது.

கன்வேயன்ஸ் அலவன்ஸும் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1 லட்சம் வாங்கும் எம்.பி்க்கள் இனிமேல் ரூ. 4 லட்சம் பெறுவார்கள்.

எம்.பிக்களின் கணவர்மார் அல்லது மனைவிமார்கள், தங்களது இருப்பிடத்திலிருந்து டெல்லி வந்து போக இனிமேல் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், தங்களது இடத்திலிருந்து டெல்லிக்கு வந்து செல்ல எட்டு முறை இலவச விமான பயணமும் இனி அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த உயர்வு போதாது என்று லாலு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குறைந்தது 500 சதவீத அளவுக்கு உயர்வு வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+