பிரபாகரனைக் காப்பாற்ற நெடியவன் ஒத்துழைக்கவில்லை! - சொல்கிறார் கேபி

நார்வேயிலிருந்து வெளியாகும் ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள கேபியின் பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன், மனைவி மதிவதனி, மகள் துவராகா மற்றும் மகன் பாலச்சந்திரன் ஆகியோரை மீட்பதற்கு தாம் கடுமையான முயற்சி மேற்கொண்டதாக குமரன் பத்மநாதன் அதில் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டத்தின் போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி எடுங்கள் என பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி தம்மிடம் உதவி கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் சாள்ஸ் ஆன்டனி களத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரின் மூலம் பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்றி பின்னர் அவர்களை கப்பல் மூலம் மீட்பதற்கு தாம் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கு நெடியவன் ஆதரவு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் குறித்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறியுள்ளார் கேபி.
போர் நிறுத்தம் ஒன்றை அமல்படுத்தி அதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மீட்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications