குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றார் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்
காஞ்சிபுரம்: கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டு அசிங்கப்படுத்தியதாக கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அர்ச்சகர் தேவநாதனிடம் நேற்று குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது.
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35). இவர் கோவில் கருவறையில் சாமி சிலைக்கு அருகே வைத்து பல பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட செயல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த அசிங்கம் பிடித்த காட்சிகளை அவரே செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இது பின்னர் வெளியில் லீக் ஆகி வீடியா காட்சிள் பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து சிக்கினார் தேவநாதன். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் தேவநாதன்.
சில வாரங்களுக்கு முன்பு தேவநாதன் மீது 8 பக்க குற்றப்பத்திரிகையை காஞ்சீபுரம் 2- வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர். நேற்று அவர் முதலாவது வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிபதி சுதா ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications