அடுத்த ஆண்டு முதல் லேண்ட்லைனுக்கும் 10 இலக்க எண்!
மும்பை: செல்போனுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல இனி தரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) க்கும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் பரிந்துரைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் பரிந்துரையை அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது செல்போனுக்கும் தரைவழி போனுக்கும் வேறு, வேறு இலக்க எண்கள் இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. மேலும் 2014-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் மற்றும் தரைவழி போன்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தரை வழிக்கு இதே இலக்க எண்கள் இருந்தால் அதை செயல்படுத்த முடியாது. எனவேதான் 10 இலக்க எண்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
10 இலக்க எண்களாக மாற்றுவதால் அடுத்த 30-ல் இருந்து 40 வருடங்கள் வரை பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்று ட்ராய் கருதுகிறது.












Click it and Unblock the Notifications