Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக். வெள்ள நிவாரணம்-தங்களுக்கு நிதியுதவிகள் குவிவதாக கூறுகிறது லஷ்கர்

Subscribe to Oneindia Tamil

Pak Flood
லண்டன்: ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனம், பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தங்களது அமைப்புக்கு இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நன்கொடைகளை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெள்ளத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவியைப் பெறத் தொடங்கியுள்ளன. வெள்ள நி்வாரணப் பணிகளுக்காக என்ற முகமூடியின் கீழ் இவை நிதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான ஜமாத் உத் தவா அமைப்பு, தங்களுக்கு இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நன்கொடைகளை அனுப்பி வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் நிதியுதவி அளித்திருப்பதாகவும், இதை வைத்து பாகிஸ்தான் வெள்ளத்திற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் அது கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அதீக் சோகான் பெஷாவரில் கூறுகையில், நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளனர். பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த நிதியை அவர்கள் அனுப்பியுள்ளனர் என்றார்.

ஆனால் இந்த நிதியை தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தலாம் என அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+