பாக். வெள்ள நிவாரணம்-தங்களுக்கு நிதியுதவிகள் குவிவதாக கூறுகிறது லஷ்கர்

பாகிஸ்தான் வெள்ளத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவியைப் பெறத் தொடங்கியுள்ளன. வெள்ள நி்வாரணப் பணிகளுக்காக என்ற முகமூடியின் கீழ் இவை நிதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான ஜமாத் உத் தவா அமைப்பு, தங்களுக்கு இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நன்கொடைகளை அனுப்பி வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் நிதியுதவி அளித்திருப்பதாகவும், இதை வைத்து பாகிஸ்தான் வெள்ளத்திற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அதீக் சோகான் பெஷாவரில் கூறுகையில், நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளனர். பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த நிதியை அவர்கள் அனுப்பியுள்ளனர் என்றார்.
ஆனால் இந்த நிதியை தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தலாம் என அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications