புதுச்சேரியில் அதிமுக கூட்டணி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியை இந்த ஆண்டே திறந்து மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று கோரி அதிமுக கூட்டணி கட்சிகள் இன்று பந்த் நடத்தின.
இதனால் புதுவையில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், தனியார் பள்ளிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், ஆலைகள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயங்குகின்றன.
இந் நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓம்சக்தி சேகர், அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கலைநாதன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications