மார்க்சிஸ்ட் செயலாளர் மீது அவதூறு வழக்கு-தலைமறைவு
சங்கரன்கோவில்: போலீஸாரைத் தாக்க வேண்டும் என்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தலைமறைவாகியுள்ளார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் ஆனந்தகுமாரை சில தினங்களுக்கு முன் போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது.
இதனை கண்டித்து கடந்த 20-ம் தேதி பனவடலிசத்திரத்தில் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் முத்து பாண்டியன் மக்களை பாதுகாக்காத காவலர்களைத் தாக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி முத்துபாண்டியன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் முத்துபாண்டியனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications