பலாத்கார வழக்கில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான ஹர்ஜோத் ஹூந்தால் சிங்கிற்கு பலாத்கார வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் மெல்போர்னின் கிழக்கிலுள்ள ஸ்பிரிங்வேல் ரயில்நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை ஹர்ஜோத் ஹூந்தால் சிங் (27) கட்டாயப்படுத்தி பாலியியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து மெல்போர்ன் விமானநிலையத்தில் வைத்து போலீசார் சிங்கை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விக்டோரியன் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் குறைந்தது 9 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் தான் பரோலில் வர முடியும் என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications