ஆனந்த் அவமானப்படுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது-அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், குடியுரிமை தொடர்பாக அவமானப்படுத்தப்பட்டது பெரும் வருத்தத்திற்குரியது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
நேற்று லோக்சபாவில் பூஜ்ய நேரத்தின்போது பாஜக உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் பேசுகையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை முதலில் பெற்றவர் ஆனந்த். அப்படிப்பட்ட ஒருவரின் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்தது பெரும் வருத்தம் அளிக்கிறது.
பத்மஸ்ரீ உள்ளிட்ட 3 பத்ம விருதுகளைப் பெற்ற ஆனந்த் போன்ற வீரர்களை இப்படி அவமானப்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது. நாட்டுக்காக பல பெரு்மைகளையும், புகழையும் தேடித் தந்தவர் ஆனந்த் என்றார் உசேன்.
அவர் பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவமானம், அவமானம் என்று கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications