ரம்ஜான்: சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 9ம் தேதி மற்றும் 11ம் தேதி சிறப்பு ரயில் (எண் 0617) இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு செப்டம்பர் 10ம் தேதி மற்றும் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண் 0618) பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
அதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஈரோடு, திண்டுக்கல் வழியாக செப்டம்பர் 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 0603) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செப்டம்பர் 9ம் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0604) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
திருநெல்வேலிக்கு...
சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு 8ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0601) இயக்கப்படும்து. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 9ம் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
நாகர்கோவில்-எழும்பூர்:
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 12ம் தேதி மாலை 5 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (எண் 0606) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 13ம் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 0605) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.