ஒரே பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள்-உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ஒரே அரசுப் பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள் பணிக்கு வந்ததால் ஏற்பட்டது தொடர்பான வழக்கில் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த தலைமை ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் கொசபேட்டையில் உள்ள ஈ.வெ.ரா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் விஜயகுமாரி. இவரை திருவண்ணாமலை மாவட்டம் காரப்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். அதேபோல அங்கு பணியாற்றி வந்த காயத்ரி தேவி, கொசப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து விஜயக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார். இந்த நிலையில்,விஜயக்குமாரியும், காயத்ரி தேவியும் பணிக்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் அறை மூடப்பட்டது. இருப்பினும் அறைக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் குதித்தார் விஜயக்குமாரி.
இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், விஜயக்குமாரிக்கு ஆதரவாக போடப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனியாக மனுத் தாக்கல் செய்த விஜயக்குமாரி, இதில் காயத்ரி தேவியையும் சேர்க்கக் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரி பரந்தாமன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காயத்ரிக்கு உத்தரவிட்டு 2 வாரகால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications