சீனாவில் நிலநடுக்கம்-14 பேர் காயம்
பெய்ஜிங்: சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் என்னும் 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. இதில் 7, 354 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 122 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன.
இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இடிபாடுகளில் சிக்கி 14 பேர் காயம் அடைந்துள்ளனர். யுன்னான் மாகாணத்தில் உள்ள குயாஜியோ என்ற பகுதியில் பெரும்பாலான தெருக்கள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.
இது இந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்டுள்ள 2-வது நிலநடுக்கம் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குயின்காய் மாகாணத்தில் முதன்முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2800 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications