அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைய வேண்டும்-வன்னியர் கூட்டமைப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக இணைய வேண்டும் என்று வன்னியர் கூட்டமைப்பு தனது நிர்வாகக் குழுவில் தீர்மானம் போட்டுள்ளது.
வன்னியர் கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.ராமூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மூலம் 15 சதவீதம் வழங்கவேண்டும்.
முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக, ஜெயலலிதாவுக்கு வன்னியர் கூட்டமைப்பு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும் இணைந்து அக்டோபர் மாதம் 7-ந் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அங்கத்தில் பாராட்டு விழா நடத்துவது.
தமிழக மக்களை பாதுகாக்க தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை மட்டும்தான் மக்கள் நினைக்கிறார்கள். எனவே விஜயகாந்த் தனது செல்வாக்கை வீணடிக்காமல் மக்கள் விரும்பும் கட்சியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications