என்னை நம்பி வந்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை நம்பி வந்தவர்களின் நம்பிக்கை என்றும் வீண் போகாது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஜெயலலிதா முன்னிலையில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் விழா, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியின்போது, திமுக, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், பாஜக, முஸ்லீம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச்சேர்ந்த 9 ஆயிரத்து 664 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோல 166 பொறியியல் கல்லூரி மாணவர்களும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 125 இஸ்லாமியப் பெண்களும் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் அனைவரையும் வரவேற்று ஜெயலலிதா பேசுகையில்,

இந்த நாட்டின் எதிர்காலமே உங்களைப்போன்ற (பொறியியல் மாணவர்கள்) இளைஞர்கள் கையில்தான் உள்ளது. நாளை இந்த நாட்டை நடத்தப்போகிறவர்கள்; ஆளப்போகிறவர்கள் நீங்கள்தான். எத்தகைய நம்பிக்கையில் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது.

அதேபோல, சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக விளங்கும். கழகத்தில் இணைந்த அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+