இந்தியாவில் இணைய பயனாளர் எண்ணிக்கை 2015-ல் மும்மடங்காக உயரும்!
இந்தியாவில், வரும் 2015ம் ஆண்டில் இன்டர்நெட் பயன்பாடு இப்போதுள்ளதைப் போன்று மூன்று மடங்கு அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 237 மில்லியனாக, அதாவது 23.7 கோடியாக அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இப்போது 81 மில்லியன் மக்கள் இன்டர்நெட் உபயோகிக்கின்றனர். இது 2006ல் இது வெறும் 49 மில்லியனாக இருந்தது.
சீனாவில் இது 650 மில்லியனாக, அதாவது 65 கோடியாக உயருமாம்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009ம் ஆண்டில் இந்த நாடுகளில் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
2015 ம் ஆண்டில் இது 19 சதவீத அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள்தான் மிகக் குறைவாக இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 30 நிமிடங்கள் மட்டுமே இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 95 சதவீதத்தினர் வெறும் மின்னஞ்சல் பயன்பாட்டுக்கு மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறார்களாம். இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் வேலை தேடும் நோக்கில் மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications