ராசா மீது வழக்கு தொடர பிரதமருக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடும் சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு இரண்டு ஆண்டுகளாக பதில் வரவில்லை என்று சாமி கூறியுள்ளார்.
இந் நிலையில் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications