தமிழத்திற்கு சுற்றுலா வந்தவர்களில் மலேசியர்களுக்கு 2வது இடம்-முதலிடத்தில் இலங்கை
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாகும்.
இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது இலங்கையாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் இலங்கையர்கள் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வந்து போயுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் இதுகுறித்துக் கூறுகையில், தமிழகத்திற்கு மலேசியர்கள் அதிக அளவில் வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவர்களின் குடும்ப வேர்கள் இங்குதான் உள்ளன. பூர்வீகம் இங்குதான் உள்ளது. இதுதான் மலேசியர்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு வர முக்கியக் காரணமாகும்.
குடும்ப விழாக்கள், மத ரீதியான விழாக்கள், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா என பல காரணங்களுக்காக மலேசியர்கள் பெருமளவில் தமிழகத்திற்கு வருகின்றனர்.
மேலும் சென்னை-கோலாலம்பூர் இடையே தற்போது அதிக அளவில் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்ன. விமானக் கட்டணம் குறைந்துள்ளது. இவையும் கூட அதிக அளவில் தமிழகத்திற்கு மலேசியர்கள் வர ஒரு
காரணமாகும்.
மலேசியாவுக்கு தமிழகத்திலிருந்து தினசரி 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி, சென்னைக்கு கூடுதலாக ஏர் ஏசியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் அதிகமாகும். அதாவது கிட்டத்தட்ட 20.5 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்திருந்தனர். 2வது இடம் டெல்லிக்கும், 3வது இடம் உ.பிக்கும் கிடைத்தது என்றார்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications