காங். தலைவர் பதவி ஒரு குடும்பத்துக்கே சொந்தமா?-பாஜக
கொல்கத்தா: காங்கிரஸ் தலைவர் பதவி ஒரு குடும்பத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கைய நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், ஒரு கட்சி தனது தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அக் கட்சியின் தனிப்பட்ட உரிமை.
ஆனால், காங்கிரசில் ஒரு குடும்பத்துக்கு மட்டும் கட்சித் தலைமைப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதா?. இது தனிநபர் பற்றிய பிரச்சனை அல்ல.
பாஜகவில் அடுத்தடுத்து 2 முறை மட்டுமே தலைமைப் பதவி வகிக்கும் ஒரு சிறந்த மரபை வாஜ்பாய், அத்வானி போன்றோர் உருவாக்கியுள்ளனர். இதை காங்கிரஸ் பின்பற்றுமா என்றார்.
பாஜக செயற்குழு ஒத்திவைப்பு:
இதற்கிடையே ஜம்முவில் செப்டம்பர் 17ம் தேதி தொடங்க இருந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிகிறது.
ராமஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications