இலவச பம்புசெட் திட்டம்-பயனாளிகள் பட்டியலை 15க்குள் அனுப்ப உத்தரவு
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கும் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே பம்புசெட் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளுக்கு புதிய பம்புசெட் மோட்டார் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதையடுத்து மின்மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணியி்ல் அந்தந்த பகுதி உதவி மின்பொறியாளர்களும், வயர்மேன்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் விவசாயிகளின் பெயர், முகவரி, சிறு குறு விவசாயிகளா என்ற விவரம், நிலத்தின் அளவு, சர்வே எண், நிலம் யாருடைய பெயரில் உள்ளது, ஏற்கனவே உள்ள மோட்டாரின் திறன் உள்ளிட்ட விபரங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் விவசாயியிடம் கையெழுத்து பெறப்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு விவசாயிகள் குறித்த விபரங்கள் கணிணியில் ஏற்றப்படும்.
அத்துடன் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்களையும் இணைத்து செப் 15ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications