சபரிமலை ஐயப்பன் கோவிலை வருடம் முழுவதும் திறக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோவிலை வருடம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்க முடியுமா என்பது குறித்து நிபுணர்களின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் டி.பி.ராதாகிருஷ்ணன், பி.பவதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில்,
அடர்ந்த காட்டுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் மட்டும் ஐயப்பன் கோயில் கருவறை வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. எனவே, ஆண்டுமுழுவதும் கோயிலைத் திறக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல கருவறையில் உள்ள புனிதமான பதினெட்டு படிகளை அகலப்படுத்துவது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கு முன்னர் இதேபோன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த மனுவில், பதினெட்டு படிகளை அகலப்படுத்துவது வாஸ்து மற்றும் மத சடங்குகளுக்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதை நேற்று நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.இதுகுறித்து நிபுணர்களின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications