ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க பெண் போலீஸ் படை
சென்னை: தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களைப் பிடிக்க பெண் போலீஸ் படை அமைக்கப்படுகிறது.
தமிழக மக்களுக்காக முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய ரூ. 1 அரிசி அதிக அளவில் அன்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுவிநியோகக் கடைகளில் விற்கவேண்டிய அரிசி மொத்தமாக கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இந்தக் கடத்தல் மிகப் பெரிய தொழிலாகவே நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை இதைத் தடுக்க அரசுத் தரப்பில் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் இல்லை.
இத்தனை நாள் லாரி மூலமாக நடந்த இந்த அரிசி கடத்தல் தற்போது மின்சார ரயில் மூலமாக நடக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மின்சார ரயில் மார்க்கமாக ஆந்திராவிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகின்றது.
இந்த துணிகர கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆண்கள் அல்ல பெண்கள். இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி ரூ. 200. இவர்களைப் பிடிக்க ஆண் போலீசார் சிரமப்படுகின்றனர்.
அரிசி கடத்தும் பெண்கள் மிகத் தெளிவாகப் பெண்கள் வகுப்பு பெட்டியில் தான் பயணம் செய்கின்றனர். அதற்குள் ஏறி ஆண் போலீசாரால் சோதனை போட முடியாததால் 40 பேர் கொண்ட பெண் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படை சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து மக்களுடன் மக்களாகக் கலந்து சோதனை போடுவார்கள். மேலும், கணிகாணிக்கவும் செய்வார்கள். இதற்காக போலீஸ் படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
பகல் நேரத்தை விட இரவில் தான் அரிசி கடத்த உகந்தது என்று கடத்தல்காரர்கள் நினைக்கின்றனர். அதனால் இரவில் அரிசி கடத்தல் அதிக அளவில் நடக்கிறது.
அரிசி கடத்தும் பெண்கள் வெறும் கருவிகள் தான். இவர்களை ஆட்டிப் படைப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications