துணை வங்கிகளை இணைத்துக் கொள்ள எஸ்.பி.ஐ. திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரத ஸ்டேட் பாங்க் தனது 5 துணை வங்கிகளையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 2 வங்கிகளை கடந்த 2 ஆண்டு சேர்த்துக் கொண்டது.
இது குறித்து எஸ்.பி.ஐ. சேர்மன் ஓ.பி. பட் கூறியதாவது,
துணை வங்கிகளை இணைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால், அது பற்றி பார்க்கலாம். அது பற்றி அரசையும், சம்பந்தப்பட்ட வங்கிகளையும் கேட்க வேண்டும் என்றார்.
இருப்பதிலேயே மிகச் சிறிய துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இன்டோர் கடந்த மாதம் தான் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இன்டோரின் 437 கோர் பாங்கிங் கிளைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சேவை செய்யும் 66 கிளைகள் உள்ளிட்ட 503 கிளைகளும் கடந்த மாதம் 26-ம் தேதி சேர்த்துக் கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications