கலர் டிவி விநியோகம்-திமுகவுக்கு எதிராக காங். கவுன்சிலர்கள் போராட்டம்
அரக்கோணம்: தங்களது வார்டுகளை விட்டு விட்டு திமுகவினரின் வார்டுகளுக்கு மட்டும் கலர் டிவி விநியோகிக்க எடுக்கப்பட்ட நகராட்சியின் முடிவைக் கண்டித்து காங்கிரஸ் வார்டு கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அரக்கோணம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்க 8500 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்துள்ளன. இவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டபோது காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளை விட்டுவிட்டு மற்ற வார்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
கோபமான காங்கிரஸ் நகர தலைவரும் கவுன்சிலருமான துரைசீனுவாசன் கடந்த 4ந்தேதி அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகத்தை மக்களுடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் வர வேண்டிய இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வந்தபின் வழங்குகிறோம் என தாசில்தார் எழுதி தந்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் அதற்கு மாறாக நாளை, இருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதைக்கேட்டு கோபமான நகர காங்கிரஸார் நாளை போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் அரக்கோணம் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications