'ஈழத்தில் நடப்பது என்ன' பேச்சு-வைகோ மீதான வழக்கு தள்ளிவைப்பு
சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தாக்கலான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வைகோவும், அப்போது மதிமுக பொருளாராக இருந்த மு.கண்ணப்பனும் பேசினர்.
அவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கண்ணப்பன் திமுகவில் சேர்ந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் வைகோ மீது மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பூபாலன் முன் விசாரணைக்கு வந்தது. வைகோ தரப்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜரானார்.
ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ சிவகங்கை சென்றிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கை அடுத்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications