பெண்களிடம் தகாத உறவு வைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
நெல்லை: பல்வேறு பெண்களிடம் தகாத உறவு வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்காசியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் பணகுடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மணிமுத்தாறு பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில் இவருக்கும், இரு பெண்களுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்தன.
இது குறித்து நெல்லை எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் புகார்கள் உண்மையென்று தெரிய வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளைக்கண்ணுவை தற்காலிக பணி நீக்கம் செய்ய எஸ்.பி. ஆஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரனிடம் பரிந்துரை செய்தார். அதன்படி வெள்ளைக்கண்ணு நேற்றிரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications