நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்-திருமாவளவன்
சென்னை : திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் இஸ்லாமியர்களோடு இருப்பான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தார் திருமாவளவன். பின்னர் நேற்று விருந்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும்.
அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது.
திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்.
எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக, நமக்காக, எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம். இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும்.
2016- சட்டசபை தேர்தலில் தலித்- முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications