திருவாரூர் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்குத் தீவைப்பு-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்கு ஒரு மர்மக் கும்பல் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் பகுதியில் உள்ள தண்டந்தோப்பை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (53). இவர் பேரளம் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இவர் வீடு அருகே இவரது சித்தப்பா மகன் ராமு, உறவினர்கள் கோவை பாண்டி உள்பட 7 பேர் வீடுகள் உள்ளது. இவர்கள் வீட்டுக்கு இன்று காலை ஒரு கும்பல் தீவைத்து விட்டு ஓடி விட்டது. தீவைக்கப்பட்டதில் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த விஜய் (25) என்ற கட்டிட தொழிலாளி தீயில் கருகி பிணமாக கிடந்தார். முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடந்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications