2 வழக்குகளிலிருந்து முத்துலட்சுமி விடுதலை-கர்நாடக கோர்ட் உத்தரவு

கடந்த 1992-ம் ஆண்டு மே மாதம், கர்நாடக மாநிலம் ராமபுரா போலீஸ் நிலையத்தை வீரப்பன் கும்பல் தாக்கியதில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், மீன்யம் என்ற இடத்தில் வீரப்பன் கும்பல் நடத்திய தாக்குதலில், போலீஸ் சூப்பிரண்டு அரிகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமது உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, வீரப்பன், முத்துலட்சுமி மற்றும் கூட்டாளிகள் மீது கர்நாடக அதிரடிப்படை தடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மேட்டூர் அருகே முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்குகளில் கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், முத்துலட்சுமி விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 6 சாட்சிகள் சேர்க்கப்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் பிறழ் சாட்சியம் அடித்து விட்டதாகவும், 2 பேர் இறந்து விட்டதாகவும், ஒருவர் காணாமல் போய்விட்டதாகவும் அரசு வக்கீல் பசவராஜ் தெரிவித்தார்.
அதேசமயம், முத்துலட்சுமி மீது 22 போலீசாரை பலிகொண்ட பாலார் குண்டு வெடிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே முத்துலட்சுமியால் தற்போதைக்கு சிறையிலிருந்து விடுதலையாகி வர முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே, கடந்த 1991-ம் ஆண்டு, துணை வனச்சரகர் சீனிவாஸ் கொல்லப்பட்ட வழக்கில், கொள்ளேகால் விரைவு நீதிமன்றம் முத்துலட்சுமியை விடுதலை செய்தது நினைவிருக்கலாம். பாலார்குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் விடுதலையானால் கர்நாடகத்தில் அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்து.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications