தமிழகத்தில் 14,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 14,000 இடங்களில் சுமார் 16,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அடுத்த 10 நாட்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றமான இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
விநாயகர் சிலைகள் ஊர்வல நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடப்பதற்கு அனைத்து பாகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இம்மானுவேல்சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்து விட்டது. அந்த நிகழ்ச்சியையொட்டி தென் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
சென்னை நகரில் அதிகபட்சமாக தியாகரா யநகர் பகுதியில் தான் 160 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications