கரூர் சர்ச்கள் மீது தாக்குதல்-இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு!

கரூர் அருகே உள்ள புகளூர் சி.எஸ்.ஐ. சர்ச், ஹைஸ்கூல் மேடு பெந்தகோஸ்தே ஜெப சபை , முல்லை நகர் ஈ.சி.ஐ. சர்ச், பைபாஸ்ரோடு ஆர்.சி. சர்ச் ஆகியவை மீது கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சர்ச் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்கு இந்து முன்னணியினர் தான் காரணம் என பாதிக்கப்பட்ட சர்ச் பாஸ்டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் இந்து முன்னணியினர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்றும், இன்றும் கரூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற்றதால் இந்து முன்னணியினர் முக்கிய நிர்வாகிகள் கைது தள்ளிப் போனதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊர்வலங்கள் முடிந்த பின் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
பாதிரியார் மீது தாக்குதல்-கிறிஸ்தவர்கள் பேரணி:
இந் நிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் நாககோடு பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலய வாளகத்தி்ல் சமூக நலக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை திருவட்டாரை சேர்ந்த காண்டிரக்டர் செய்து வந்தார்.
இதில் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக ஆலய நிர்வாகத்திற்கும், காண்டிரக்டருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 20ம் தேதி மாலை ஆலய வாளகத்தில் நின்று கொண்டிருந்த பங்கு தந்தை எக்கர்மென்ஸ் மைக்கேல் என்பவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பங்கு தந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குலசேகரம் வட்டார ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் நேற்று மாலை குலசேகரம் நாககோடு சந்தி்ப்பில் இருந்து அரசமூடு சந்திப்பு வரை கண்டனப் பேரணி நடந்தது.
பேரணியை குலசேகரம் வட்டார கிறிஸ்வத ஐக்கிய பேரவை துணை தலைவர் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications