பொறையார் பஸ் நிலையத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் சூட்ட சரத்குமார் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை மாவட்டம், பொறையாரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...

நாகை மாவட்டம் பொறையாரில் கடந்த 3.12.1976 அன்று நடைபெற்ற பேருந்து நிலைய திறப்பு விழாவின் போது, கர்ம வீரர் காமராஜரின் பெயரை சூட்டியுள்ளனர்.

தற்போது அந்த பேருந்து நிலையத்தை புதுப்பித்து அதற்கு அறிஞர் அண்ணாவின் பெயரைச் சூட்ட தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

எனவே, பொறையார் பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த காமராஜர் பெயரையே, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கும் நீடிக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+