காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது-அமெரிக்காவிடம் திட்டவட்டமாக கூறிய பாக்.
வாஷிங்டன்: காஷ்மீரில் ஊடுறுவல்களைத் தடுக்குமாறு கூறிய அமெரிக்காவிடம், அதுகுறித்து எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர்கள். உண்மையில் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு இந்த தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை திட்ட உருவாக்கத் துறை இயக்குநர் ரிச்சர்ட் ஹாஸ் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவருக்கு இடையே அக்டோபர் 31ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது இப்படித் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி.
இதுதொடர்பான ரகசிய ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், காஷ்மீர் மற்றும் இந்தியாவுக்குள் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுறுவி வருவது குறித்த பிரச்சினையை எழுப்பிய ஹாஸ், காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பதிலளிக்கையில், காஷ்மீர் விவகாரம் குறித்து தொடர்ந்து அமெரிக்கா பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. காஷ்மீர் எங்களுக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளார் என அந்த ஆவணம் தெரிவிக்கிறது.
காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளின் ஆதரவுடன் வன்முறை தலைவிரித்தாடும் வரும் நிலையில், தற்போது இந்த ரகசிய ஆவணத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications