For Daily Alerts
Just In
ஜெயலலிதா கொடுப்பதை வாங்கி கொள்வோம்-டாக்டர் சேதுராமன்
நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சாதி கலவரத்துக்காக ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்த கூடாது என்பது எங்கள் இயக்கத்தின் லட்சியம். சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை அருகே கொந்தகையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் போது நாங்கள் சாமதான முயற்சியில் ஈடுபட்டோம்.
இந்த இயக்கம் வளர்ந்த பின் தென்மாவட்டங்களில் சாதி கலவரம் இல்லை. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்தையும் எங்களையும் இணைத்ததன் மூலம் இரு இயக்க தொண்டர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கொடுக்கும் சீட்களை வாங்கி கொள்வோம். கடந்த முறை என்னை போட்டியிட வற்புறுத்தியதாலேயே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் சேதுராமன்.
Comments
Story first published: Saturday, September 18, 2010, 16:51 [IST]