தமிழகத்தில் 2 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: பணியாளர் சங்கத் தலைவர்
நெல்லை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நெல்லையில் நேற்று மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு ஒரு நபர் பரிந்துரைப்படி அரசு பணியாளர்களில் 50 பதவிப் பிரிவினருக்கும், 225 தர ஊதியங்களிலும் ஊதிய உயர்வு வழங்கி வரவேற்கத் தக்க முடிவுகளை அறிவித்துள்ளது.
முந்தைய ஊதிய குழுக்களால் ஏற்பட்ட முரண்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால் மக்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் இடையே உள்ள உறவு சீர்கெட்டுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள், மருத்துவத் துறை ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பங்கேற்பு ஊதியம் என்ற தி்ட்டத்தின்படி குடும்ப ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ஓய்வூதியம், பங்கேற்பு ஓய்வூதியம் ஆகியவற்றை மாற்றி ஓய்வூதிய விதிப்படி அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 9-ம் தேதி விழுப்புரம் மீனாட்சி மஹாலில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்த உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications